"இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்" - அமைச்சர் பொன்முடி கேள்வி

"இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்" - அமைச்சர் பொன்முடி கேள்வி

"இந்தி தெரிந்தவர்கள் இங்கு பானிபூரி தானே விற்கிறார்கள்" - அமைச்சர் பொன்முடி கேள்வி
Published on

இந்தியை படிக்க வேண்டாம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. தமிழகத்தில் இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடுமா என்று தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

சென்னையில் ராயப்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, " தமிழகத்திலேயே கேட்கிறார்கள் ; ஏன் ஸ்டாலின் இந்தியை எதிர்க்கிறார் என்று. தமிழகத்தில் இந்தி படித்தால் வேலை கிடைத்துவிடுமா என்ன ?. இந்தி தெரிந்தவர்கள் இங்கு என்ன செய்கிறார்கள், பானிபூரி விற்கும் நிலை தான் இருக்கிறது

இந்தியை படிக்க வேண்டாம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. 3-வது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் ; அதில் தவறில்லை. ஆனால் இந்தி திணிப்பை மட்டும் தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com