இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 முதல் நடைபெறும் : அண்ணா பல்கலை. அறிவிப்பு.

இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 முதல் நடைபெறும் : அண்ணா பல்கலை. அறிவிப்பு.
இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22 முதல் நடைபெறும் : அண்ணா பல்கலை. அறிவிப்பு.

இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு  நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்முறைத் தேர்வுகள் வரும் 22-ம் தேதி,  எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடைபெறும். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இணையவழியில் தேர்வை நடத்த உள்ளதாக அறிவிப்பு. 3 மணி நேரத் தேர்வாகவே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com