600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான மதிப்பெண்கள் பட்டியல் 19-ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி உள்ளன. வரும் 22-ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ’’+2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன்முறையாக தசம எண்களில்(decimal) வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது. 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வகுப்புக்கு வராத 39000 தனித்தேர்வர்களும் தேர்ச்சியடையவில்லை. மாணவர்கள் மதிப்பெண்களில் திருப்தியடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதிக்கொள்ளலாம்.

551-600 மதிப்பெண்கள் வரை 30,600 மாணவர்கள் எடுத்துள்ளனர். 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு 4,35,973 மாணவிகளும், 3,80,500 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற் பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்’’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com