இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வில் விலக்கா? - அமைச்சர் விளக்கம்

இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வில் விலக்கா? - அமைச்சர் விளக்கம்

இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வில் விலக்கா? - அமைச்சர் விளக்கம்
Published on

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

இந்நிலையில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாகவும் அதற்கு பதில் வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com