எம்பிபிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு: அக்டோபர் 27 ஆம் தேதி தொடக்கம்.!

எம்பிபிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு: அக்டோபர் 27 ஆம் தேதி தொடக்கம்.!
எம்பிபிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு: அக்டோபர் 27 ஆம் தேதி  தொடக்கம்.!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27 ஆம் தேதி இணையவழியில் தொடங்குகிறது. நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துக் கல்லூரிகளில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீதம் 547 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 -2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தவுள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவ மாணவிகள் இணையதளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்த கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்கு நவம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com