அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதுதான்..

அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதுதான்..
அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதுதான்..

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவலை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் மாவட்டத் திறன் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

கல்வித்தகுதி

அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் ரூ. 50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பின்னர் கலந்தாய்வு நடைபெறும். அதன் தரவரிசைப் பட்டியல் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9444296006 என்ற செல்ஃபோன் எண்ணைத் தொடா்புகொண்டு கூடுதல் விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 15.9.2020

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் முகவரி: https://skilltraining.tn.gov.in

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com