14 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை; இந்த ஆண்டு நிலை என்ன?-முழு விபரம்

14 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை; இந்த ஆண்டு நிலை என்ன?-முழு விபரம்
14 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை; இந்த ஆண்டு நிலை என்ன?-முழு விபரம்

14 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 60 ஆயிரம் சீட்களில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற செய்தி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (டிஎன்இஏ) கவுன்சிலிங் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, நான்காவது சுற்று கவுன்சிலிங்கிற்குப் பிறகு 60,000 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாடு முழுவதும், 446 பொறியியல் கல்லூரிகள் கவுன்சிலிங் பங்கேற்றன. மேலும், ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கிற்கு (SWC), 1.54 லட்சம் இடங்கள் இருந்தன, அதில் 93,571 பொறியியல் இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. நான்கு சுற்றுகளில் செய்யப்பட்ட மொத்த ஒதுக்கீட்டில், 84,812 இடங்கள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், 8759 இடங்கள் 7.5 சதவீத அரசுப் பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையில், TNEA 2021 இன் போது, 1.51 லட்சத்தில் 89,187 இடங்கள் மட்டுமே பொதுப் பிரிவின் கீழ் நிரப்பப்பட்டன என்று தரவு மேலும் சுட்டிக்காட்டியது. அதேபோல், 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவின் கீழ் 7206 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

12 கல்லூரிகள் மட்டுமே அனைத்து இடங்களையும் நிரப்ப முடிந்தது. மேலும், இந்த ஆண்டு 66 கல்லூரிகள் மட்டுமே 90% இடங்களையும், 36 கல்லூரிகள் 10க்கும் குறைவான இடங்களையும் நிரப்பியுள்ளன (ஒற்றை இலக்க சேர்க்கை). 100% சேர்க்கையே இல்லாத கல்லூரிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7 ஆக இருந்த நிலையில், இம்முறை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com