ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5,90,000 பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5,90,000 பேர் விண்ணப்பம்
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5,90,000 பேர் விண்ணப்பம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி‌ பெற வேண்டும். நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க க‌டந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ‌தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் விண்ணப்பகளை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் தேர்வு தேதி, காலி பணியிடங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எ‌ன்றும் ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com