மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்

மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்

மருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்தம்
Published on

அகில இந்திய அளவிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரிக்கப்பட்டது. அப்போது மருத்துவ கவுன்சில் பரிந்துரையின் பேரில் மருத்துவக் கல்வியின் தர‌த்தை உயர்த்தும் நோக்கத்தில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என சி.பி.எஸ்.இ தரப்பில் வாதம் முன்வைக்கபட்டது. பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களாக 196 மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது. மேலும் 2 வாரத்திற்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மருத்தவ படிப்பிற்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அத்துடன் நீதிமன்றத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவு வரும் வரை அகில இந்திய அளவிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com