எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா காஞ்சிபுரம் மாவட்டம் காட்டங்குளத்தூரில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பாரிவேந்தர்,
பல்கலைக்கழகத் தலைவர் சத்தியநாராயணன், இன்ஃபோசிஸ் நிறுவனர் பத்மவிபூஷன் நாராயணமூர்த்தி, இந்திய அணுசக்தி கழகத் தலைவர்
டாக்டர் சேகர்பாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6150 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் சேகர்பாசுவுக்கு எஸ்.ஆர்.எம்
பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.