பள்ளி மாணவியை கிண்டல் செய்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்

பள்ளி மாணவியை கிண்டல் செய்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்
பள்ளி மாணவியை கிண்டல் செய்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்

திருத்துறைப்பூண்டி அருகே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவியை கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை தாக்கிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அத்திமடை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள், நீர்மூலை தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த வீரசேகரன், மணிகண்டன், ஜீவா ஆகிய மூவரும் கேலி கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளன .

இதையடுத்து அந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை கார்த்திகேயனை மூவரும் கட்டை மற்றும் கையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த கார்த்திகேயனை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் (23) என்பவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com