சென்னையில் வடமாநில இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது

சென்னையில் வடமாநில இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
சென்னையில் வடமாநில இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பள்ளிக்கரணை மணிமேகலை 2-வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வடமாநில இளைஞர்கள் அங்கேயே தங்கி கட்டட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு மேடவாக்கத்தில் உள்ள கட்டுமான கட்டடத்தில் பணிபுரியும் அமர் மற்றும் பிஷால் ஆகிய இருவரை குடிப்பதற்காக பள்ளிக்கரணைக்கு வருமாறு மகேஷ் டோசர் (34) அழைத்துள்ளார்.

இதையடுத்து மூவரும் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிஷால் மேடவாக்கத்திலிருந்து ஆட்களை வரவழைத்து மகேஷ் டோசரை கட்டையால் கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சென்ற பள்ளிக்கரணை போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார்.

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிஷால் (20), அமர் பாஸ்கர் (21), மோண்டா பாஸ்கர் (18), டிப்பாஸ்கர் (18), கான் கான் (32), ரேகல் ஹால்டர் (20), மஞ்சித் (22), ஆகிய ஏழு வடமாநில நபர்களை கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் இவர்களுக்குள் இருந்த பிரச்னை காரணமாக, இங்கு ஒன்றாக மது அருந்தும்போது வாய்த் தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com