புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி: இளைஞரை விளாசிய கிராமத்தினர்!

புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி: இளைஞரை விளாசிய கிராமத்தினர்!
புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி: இளைஞரை விளாசிய கிராமத்தினர்!

சேலம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

சேலம், கெங்கவல்லி தாலுகா, புளியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 15 வயது மகள் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற இளைஞர் சிறுமியை கடத்திச் சென்று அருகில் இருந்து முட்புதரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமி கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் ராஜ்குமாரை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்தனர். ராஜ்குமார் மீது வீரகனூர் காவல்நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com