7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பொறியியல் பட்டதாரி கைது

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பொறியியல் பட்டதாரி கைது
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பொறியியல் பட்டதாரி கைது

நாமக்கல் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியியல் பட்டதாரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே கூலித் தொழிலாளி ஒருவரின் 7 வயது மகளை அப்பகுதியில் உள்ள இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தைகள் நல குழுமத்திற்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த பொறியல் பட்டதாரி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், அந்தச் சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com