திருமணத்தை மீறிய உறவில் தாய்...7 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்; சென்னையில் அதிர்ச்சி

திருமணத்தை மீறிய உறவில் தாய்...7 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்; சென்னையில் அதிர்ச்சி
திருமணத்தை மீறிய உறவில் தாய்...7 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்; சென்னையில் அதிர்ச்சி

7 வயது குழந்தையை பாலியல் வண்புணர்வு செய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில், குழந்தையின் தாயோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர்தான் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சென்னை பெரும்பாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 33 வயதான பெண் ஒருவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 வருடங்களாக பிரிந்து வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று குழந்தையின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில், தாயுடன் உறவில் இருந்த மகேஷ்குமார் என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய்க்கு மகேஷ்குமார் தெரிவித்தவுடன், அவர் வந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மகேஷ்குமாரை (33) கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com