மதுரை: போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி -இளைஞர் கைது

மதுரை: போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி -இளைஞர் கைது
மதுரை: போன் செய்தால் கஞ்சா டோர் டெலிவரி -இளைஞர் கைது

மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்த இளைஞரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில்  இரு சக்கர வாகனம் மூலம் டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை செய்வதாக நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மேலக்குயில்குடி பகுதியில் ரோந்து சென்று காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் வயது ( 21) என்பவர் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சாவை டோர் டெலிவரியாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிவனேஸ்வரனை நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் “கஞ்சா விற்பனை செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆடம்பரமாக செலவு செய்வதற்காக கஞ்சா விற்பனை செய்து வந்தேன்” என சிவனேஷ்வரன் தெரிவித்தார். மேலும் சிவனேஸ்வரனிடம் கஞ்சா எங்கு இருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com