புதுச்சேரி: மாமூல் கேட்டு பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கிய இளைஞர்கள்

புதுச்சேரி: மாமூல் கேட்டு பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கிய இளைஞர்கள்
புதுச்சேரி: மாமூல் கேட்டு பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கிய இளைஞர்கள்

புதுச்சேரியில் ஜவுளிக்கடை ஒன்றில் மாமூல் கேட்டு அதன் உரிமையாளரை இளைஞர்கள் சிலர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்திரக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு இளைஞர்கள் சிலர் தாக்கிவிட்டுச் சென்றதாக, பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் அடையாளம் கண்டு, கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த கருணா மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அன்றைய தினமே அதே இளைஞர்கள் சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் உள்ள ஒரு துணிக்கடையிலும் மாமூல் கேட்டு கடையின் உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com