கோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது

கோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது
கோவை : உதவி ஆய்வாளரை தாக்கிய பெண் காவலரின் கணவர் கைது

கோவையில் மது போதையில் காவல்துறை உதவி ஆய்வாளரைத் தாக்கிய பெண் காவலரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் அருகே முருகேஷ் என்பவரது தோட்டத்தில் இரண்டு பேர் அமர்ந்து மது குடிப்பதாகவும், அப்பகுதியில் சாலையில் செல்வோரிடம் அவர்கள் தகறாறு செய்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் என்பவரை போதையில் இருந்த நபர் தகாத வார்த்தையில் பேசியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் உதயகுமார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சக போலீசார், மதுபோதையில் இருந்த வாலிபரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மது போதையில் இருந்த வாலிபர் போத்தனூரை சேர்ந்த மதன்குமார் என்பதும் அவர் பெண் காவலர் ஒருவரின் கணவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மதன்குமாரை கைது செய்த போலீஸார், அவர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com