காதலனுடன் இணைந்து கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண்..!

காதலனுடன் இணைந்து கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண்..!
காதலனுடன் இணைந்து கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண்..!

பெரியகுளம் அருகே பாலப்பட்டியில் கணவனை கொன்றுவிட்டு, குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி மீனா. கடந்த 23ஆம் தேதி இரவு குடிபோதையில் கீழே விழுந்து தனது கணவர் இறந்துவிட்டதாக மீனா தெரிவித்திருக்கிறார். இததனை நம்பிய கிராம மக்களும் தமிழ்ச்செல்வனின் உடலை அடக்கம் செய்தனர். இதற்கிடையில், தமிழ்ச்செல்வனின் மரணத்தில் சந்தேகமடைந்த அவரது சகோதரர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், மீனா மீது சந்தேகமடைந்த போலீசார், அவரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர். அதில், மீனாவும், அவரது காதலனும் இணைந்து தமிழ்ச்செல்வனை கொன்று நாடகமாடியது தெரியவந்தது. அதனையடுத்து, தமிழ்ச்செல்வன் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடையே கொலை தொடர்பாக சுரேஷ் என்பவர் கொடைக்கானல் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com