குடும்பத் தகராறில் இரும்பு ராடால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி – பரபரப்பு வாக்குமூலம்

குடும்பத் தகராறில் இரும்பு ராடால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி – பரபரப்பு வாக்குமூலம்
குடும்பத் தகராறில் இரும்பு ராடால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி – பரபரப்பு வாக்குமூலம்

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அவினாசிபட்டி கிராமத்தில் கோயக்காடு எனும் பகுதியில் வசித்து வந்தவர்கள் சக்திவேல் (60), கலைச்செல்வி (55) தம்பதியர். இவர்களுக்கு இடையே இன்று காலை ஏற்பட்ட தகராறில் கலைச்செல்வி, இரும்புத் தடியால் சக்திவேல் தலையில் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிபாளையம் போலீசார், விசாரனை செய்து வந்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி திருச்செங்கோடு, எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பிரேதத்தை கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கணவனை கொலை செய்த மனைவி கலைச்செல்வி போலீசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில், “உயிரிழந்த சக்திவேலுக்கும் எனக்கும் விஜயகிருஷ்ணராஜ் (31) என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் புரோகிரமராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் குழந்தை இல்லாததால் நந்தினியை விவாகரத்து செய்துவிட்டு வெப்படை பகுதியைச் சேர்ந்த வினிதா (28) என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு சஞ்சு ஸ்ரீ என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. மருமகளை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக எனக்கும் என் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து கடந்த இரண்டு நாட்களாக சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை எனது கணவர் சக்திவேல் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் என்னை கழுத்தைப் பிடித்து தள்ள முயற்சித்தார். என்னை அவர் எதுவும் செய்து விடக் கூடாது என்பதற்காக அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து கழுத்துப் பகுதியில் தாக்கினேன்.

இதில், சரிந்து விழுந்த அவர் உயிரிழந்துவிட்டார்" எனக் கூறியுள்ளார். குடும்பத் தகராறில் கணவனை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com