பல குரலில் பேசி நகை மோசடி செய்து திரைப்படம் எடுத்த பெண்

பல குரலில் பேசி நகை மோசடி செய்து திரைப்படம் எடுத்த பெண்
பல குரலில் பேசி நகை மோசடி செய்து திரைப்படம் எடுத்த பெண்

சென்னை வளசரவாக்கத்தில் தாலி தோஷம் நீக்குவதாகக் கூறி பெண்ணிடமிருந்து 72 சவரன் நகையை வாங்கி ஏமாற்றிய சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கம் அழகிரி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரும் சீர்காழியைச் சேர்ந்த அலிம்ஷா என்பவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டங்கள் வருவதாக விஜயலட்சுமி கூறியதால், இதுபற்றி சாமியார் ஒருவரிடம் பேசுமாறு அலிம்ஷா கூறியுள்ளார். அந்த சாமியார் விஜயலட்சுமிக்கு தாலிதோஷம் இருப்பதாகவும், அதற்கு நகைகளை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனால், கணவருக்கு தெரியாமல் விஜயலட்சுமி, சிறுக சிறுக 72 சவரன் நகையை கொடுத்துள்ளார். ஆனால் நகைகள் திரும்ப கிடைக்காததால் விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அலிம்ஷாவே விஜயலட்சுமியிடம் குரல் மாற்றி பேசி, ஏமாற்றியது தெரியவந்தது. அலிம்ஷா இதுபோல் பலரிடம் நகை மோசடி செய்து, அதில் கிடைத்த பணத்தை கொண்டு சொந்தமாக திரைப்படம் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com