கணவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரண்டர் ஆன மனைவி - அதிர வைத்த காரணம்!

கணவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரண்டர் ஆன மனைவி - அதிர வைத்த காரணம்!
கணவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரண்டர் ஆன மனைவி - அதிர வைத்த காரணம்!

மனைவி மாற்று முறைக்கு ஒத்துழைக்குமாறு வற்புறுத்திய கணவனை இரும்பு கம்பியால் மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தனது கணவரை இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்த பெண், உடனடியாக மதனயாகனஹள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், தன்னை தனது உறவினர்களுடன் மனைவி மாற்று முறைக்கு அவர் வற்புறுத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது கணவரை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஹரோக்யதானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வாமி ராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவர் தனது முதல் மனைவியை பிரிந்த பிறகு, பியூட்டிஷியனான நேத்ரா(35) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மனைவி மாற்று முறைக்கு வற்புறுத்தியதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்ததாகவும் அதனைத்தொடர்ந்து, இரவு 10 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த தனது கணவனை அந்தப் பெண் இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும் கூறினர். தற்போது அந்த பெண் காவல்நிலையத்தில் உள்ளதாகவும் கூறினர்.

இதுகுறித்து ஸ்வாமி ராஜின் முதல் மனைவி சத்யகுமாரி போலீசாரிடம் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு நேத்ராவும், ஸ்வாமி ராஜும் திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்குமிடையே அடிக்கடி சொத்துபிரச்னை நடந்துவந்ததாகவும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com