சென்னை: காரில் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; 4 பேர் கைது

சென்னை: காரில் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; 4 பேர் கைது
சென்னை: காரில் சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; 4 பேர் கைது

போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் மடக்கி கூட்டு வன்கொடுமை செய்து நகை பறித்து சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகளவில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அதில் பெரும் பங்கு வகிப்பது பாலியல் குற்றங்கள்தான். சிறுமிகள் முதல் 60 வயது பெண்கள் வரை பல்வேறு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்தவாறே உள்ளன. அந்த வரிசையில் இப்போது போரூரிலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தேறி உள்ளது.

போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்றிருக்கிறார். அப்போது போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்த மர்ம நபர்கள் நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி காரை ஓட்டி வந்த டிரைவரை அடித்து விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்திச் சென்றனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தி முனையில் நான்கு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கத்தி முனையில் கூட்டு வன்கொடுமை செய்து நகை பறித்து சென்ற சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொளுத்துவான்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் இரு தரப்பினரிடையே கஞ்சா விற்பனை செய்வதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com