தென்காசி | கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம் - கணவரே கொலை செய்தாரா?

தென்காசி நகரின் மையப் பகுதியில் கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்காசி
தென்காசிகோப்புப் படம்

தென்காசி மாவட்டம் நகரப்பகுதியில் உள்ள நடுமாதாங்கோயில் தெருவில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில், சந்திரன்-சித்ரா என்ற தம்பதியினர் கடந்த 10 வருடங்களாக வாடைகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து இன்று அதிக துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அக்கம்பக்கத்தில் வசித்து வருபவர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், தகவலின் பேரில் விரைந்து சென்ற தென்காசி காவல்துறையினர், துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

Crime
Crime File picture

அப்போது, கட்டிலில் சித்ரா கட்டிவைக்கப்பட்ட நிலையில் முகம் சிதலடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்த வீட்டில், மனைவி மட்டும் கை, கால்கள் கட்டப்பட்டு முகம் சிதலமடைந்த நிலையில் இறந்து கிடந்ததால், சித்ராவை அவரது கணவர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது கணவரான சந்திரனை தற்போது காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com