காதலரை வைத்து கணவரை ரகசியமாக கொன்ற மனைவி கைது

காதலரை வைத்து கணவரை ரகசியமாக கொன்ற மனைவி கைது
காதலரை வைத்து கணவரை ரகசியமாக கொன்ற மனைவி கைது

டெல்லியில் கணவரை ஆள் வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கிழக்கு டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் சுபோத் ஜெயின்(42) மற்றும் அவரது மனைவி பிரீத்தி ஜெயினும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் சுபோத் ஜெயின் சுயநினைவில்லாமல் இருந்தார்.  இதனையடுத்து அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு சுபோத் ஜெயின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து அவரது மனைவி பிரீத்தி ஜெயின், “தனது கணவர் அடிக்கடி இது மாதிரி மயங்கி விழுவது வழக்கம்” எனக் காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பின்னர் சுபோத் ஜெயினின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்த வழக்கு விசாரணையில் பிரீத்தி ஜெயினிற்கும் ராகுல் ஜெயின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராகுலை பிடித்து விசாரித்த போது அவர், “எனக்கும் பிரீத்தி உள்ள பழக்கம் இருந்தது. இதனால் நானும் பிரீத்தியும் சேர்ந்து சுபோத் ஜெயினை கொலை செய்ய திட்டமிட்டோம். 

இதற்காக என்னுடைய நண்பன் விஜய் ஹூடாவை ஏற்பாடு செய்தோம். விஜயிற்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். எங்கள் திட்டப்படி பிரீத்தி அவரது தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு வெளியே சென்றார். அப்போது நான் விஜயிடம் தகவல் கொடுத்தேன். அவரிடமிருந்த வீட்டு சாவியை வைத்து அவர் வீட்டிற்குள் சென்று சுபோத் ஜெயினை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் மடி கணினி ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com