இறந்த கணவரை எரியூட்ட முயன்ற கடைசி நேரத்தில் மனைவி கைது.. விசாரணையில் பகீர்!

இறந்த கணவரை எரியூட்ட முயன்ற கடைசி நேரத்தில் மனைவி கைது.. விசாரணையில் பகீர்!
இறந்த கணவரை எரியூட்ட முயன்ற கடைசி நேரத்தில் மனைவி கைது.. விசாரணையில் பகீர்!

சீர்காழி அருகே கீழமூவர்கரையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை அடித்து கொலை செய்ததுமன்றி தீவைத்து கொளுத்திவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மயானத்தில் எரியூட்ட முயன்றபோது போலீசார் பிடித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகன்ளும் ஒரு மகளும் உள்ளனர். சக்திவேல் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மனைவி வசந்தாவிடம் விசாரித்தபோது தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவன் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

அதனை நம்பிய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் இன்று சக்திவேலின் உடலை அடக்கம்செய்ய முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து இறந்த சக்திவேலின் உடலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டுசென்று தகனமேடையில் கிடத்தி இறுதிச் சடங்குகள் நடைபெற்றிருக்கிறது. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்க்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுடுகாட்டில் இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சக்திவேலின் மனைவி வசந்தா மற்றும் மகன் ரூபனிடம் தீவிர விசாரனை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி வசந்தா நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வசந்தா சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்து கொலைசெய்து, அதனை மறைப்பதற்கு வீட்டில் இருந்த துணிகளை இறந்த சக்திவேல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அறையின் கதவை மூடி உள்ளதும், தாய் கொலை செய்ததை மறைத்து, மகன் ரூபன் தந்தை உடலை அடக்கம்செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து தாய் மகன் இரண்டு பேரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழமூவர்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com