சென்னையில் கணவரை ஜீவசமாதியாக்கிய மனைவி? மகளின் புகாரையடுத்து காவல்துறை விசாரணை

சென்னையில் கணவரை ஜீவசமாதியாக்கிய மனைவி? மகளின் புகாரையடுத்து காவல்துறை விசாரணை
சென்னையில் கணவரை ஜீவசமாதியாக்கிய மனைவி? மகளின் புகாரையடுத்து காவல்துறை விசாரணை

சென்னையை சேர்ந்த ஒருவரை உயிரோடு புதைத்து ஜீவசமாதி ஆக்கியதாக சந்தேகத்தின் பேரில் அவரின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை பெரும்பாக்கம், கலைஞர் நகர், 8வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60) என்பவரது மனைவி லட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்களது மகன் துபாயில் வேலை பார்க்கிறார். மகள் தமிழரசி (வயது 25), சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நாகராஜ் குறி சொல்லி சாமி ஆடுவதை தொழிலாக கொண்டிருந்திருக்கிறார். இவருக்கு கடந்த 17ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது மனைவியிடம் தான் சாக போவதாகவும், தன்னை வீட்டின் கொல்லைபுறத்தில் உள்ள குழியில் ஜீவ சமாதியாக புதைத்து விடுமாறு கூறி கொல்லை புறத்தில் இருந்த குழியில் அமர்ந்து கொண்டு, மனவியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியே கணவனை உயிருடன் குழிக்குள் மண்ணை போட்டு மூடியிருக்கிறார்.

வீட்டில் தனது தந்தை இல்லாததால் சந்தேகமடைந்த மகள் தமிழரசி தனது தாயிடம் தந்தை எங்கே என்று கேட்டுள்ளார். பதிலளிக்க தயங்கிய தாய், ஒரு கட்டத்தில் ஜீவசமாதியடைந்ததை கூறியுள்ளார். பின்னர் தமிழரசி இது குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து லட்சுமியிடம் விசாரித்து வருகின்றனர். இன்று வருவாய் துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஜீவ சமாதி அடைந்தவரின் உடலை தோண்டி எடுக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com