விருதுநகர்: குழந்தை பெற்ற 14 வயது சிறுமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விருதுநகர்: குழந்தை பெற்ற 14 வயது சிறுமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
விருதுநகர்: குழந்தை பெற்ற 14 வயது சிறுமி; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், 14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, அச்சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை அருகே மடத்துபட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி ரதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இச்சிறுமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்திற்கு வந்திருப்பவர் சிறுமியாக இருப்பதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் வயதை கேட்டுள்ளனர். அந்த சிறுமி வயது 14 என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், சிறுமியின் கர்ப்பம் பற்றி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் சிறுமியிடமும் அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கும் அவரது உறவினரான சின்னராசு என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவரது உறவினர்களே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளன. சிறுமி தற்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோதுதான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக சின்னராசுவை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com