விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

விழுப்புரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது
Published on

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, மேல்மலையனூர் அருகே உள்ள நொச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் சங்கர் (21) சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு அதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து ஆட்கள் வருவதை பார்த்த சங்கர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com