அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமி.. பெற்றோர் விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்!

அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமி.. பெற்றோர் விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்!
அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமி.. பெற்றோர் விசாரித்ததில் வெளியான பகீர் தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலம் படவுனில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாகக் கூறப்பட்டு, அச்சிறுவன் மீது கைது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படவுனில் உகைட்டி என்ற கிராமத்தில், 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, அதே கிராமத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் அங்கு வந்து, சிறுமியை தன்னுடன் மாட்டுக் கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார். அச்சிறுமியை பாலியல் அத்துமீறல் செய்துவிட்டு தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன் , அவளது உடைகளைப் பார்த்துப் புரிந்துகொண்ட பெற்றோர், சிறுமியிடம் தீவிரமாக விசாரணை செய்த போது சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். உடனே காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து  எஸ்பி சித்தார்த் வர்மா கூறுவது, ‘’ குற்றம் புரிந்தவருக்கு 10 வயது மைனர் என்பதால் அச்சிறுவனை பிடித்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றன. மேலும் குற்றவாளி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவச் சிகிச்சைக்காக மாவட்ட மகளிர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com