\
கொலையில் முடிந்தது பொல்லாத ஆசை!

கொலையில் முடிந்தது பொல்லாத ஆசை!

கொலையில் முடிந்தது பொல்லாத ஆசை!
Published on

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கொழுந்தனின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை அருகே உள்ள கொலாபா பகுதியை சேர்ந்தவர் மகேந்திரா. இவர் மனைவி ஸ்வேதா டெண்டல் (வயது 28). இரண்டு அடுக்கு மாடி கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். மேல் தளத்தில் மகேந்திராவும் ஸ்வேதாவும் இருந்தனர். கீழ்த் தளத்தில் அவரது தம்பி சேத்தனும் அவர் நண்பர் ஹிதேஷ் கர்தக் பண்டிட்டும் வசித்து வந்தனர். பண்டிட்டுக்கு ஸ்வேதா மீது ஒரு கண். அடிக்கடிப் பார்த்து பேசியுள்ளார். ஸ்வேதாவும் பண்டிட்டிடம் கள்ளம் கபடம் இல்லாமல் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன், அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்தார் பண்டிட். பிறகு மேல் தளத்துக்கு சென்று ஸ்வேதாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் மேலான ஆசை அதிகரித்தது. ஸ்வேதாவை தொட்டுப் பேசத் தொடங்கினார்.

கடுப்பான ஸ்வேதா, பண்டிட்டை திட்டினார். அதைக் கண்டுகொள்ளாமல் அவரை கட்டிப் பிடிக்கத் தொடங்கினார். இதை எதிர்பார்க்காத ஸ்வேதா, பண்டிட்டை வெளியே தள்ளி, கதவை அடைக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த கரண்டியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தினார் பண்டிட். இதில் நிலைக்குலைந்து விழுந்தார் ஸ்வேதா. பின்னர், கத்தியால் அவர் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார் பண்டிட். பின்னர், ரொம்ப நல்ல பிள்ளை போல, ’என்னாச்சு ஸ்வேதாவுக்கு?’ என்று நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசார் சுற்றி வளைத்ததும் தப்பிக்க வழியின்றி ஒப்புக்கொண்டார் பண்டிட். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com