இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு - தருமபுரியில் செவிலியர் உட்பட 7 பேர் கைது

இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு - தருமபுரியில் செவிலியர் உட்பட 7 பேர் கைது
இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத கருக்கலைப்பு - தருமபுரியில் செவிலியர் உட்பட 7 பேர் கைது

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் கருத்தரித்த பெண்களின் கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட மருத்துவத்துறை ஊரகப் பணிகள் இணை இயக்குனர்க னிமொழிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் உதவியுடன் செட்டிக்கரை பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (33) சதீஷ்குமார்(37), சுதாகர்(37), தருமபுரியை சேர்ந்த கற்பகம் (38) ஆகியோர் எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல் கருவுற்ற பெண்களின் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, பெண் சிசுக்கள் இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் இதற்கு உடந்தையாக இடைத்தரகர்கள் சரிதா(40), குமார்(38), ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (33) இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com