அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் யூ-டியூபர் மாரிதாஸ் கைது

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் யூ-டியூபர் மாரிதாஸ் கைது
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் யூ-டியூபர் மாரிதாஸ் கைது

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது யூடியூபர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் தொடர்பாக, அந்த நிறுவன தலைமையிடம் அளித்த புகாரில், உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளிக்கப்பட்டதாக மின்னஞ்சல் ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டிருந்தார். அந்த மின்னஞ்சல் போலியானது என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணை செயல் ஆசிரியர் வினய் சரவாகி புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், போலி ஆவணம் உருவாக்குதல், மோசடி செய்தல் என பிரிவு 465, 469 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பப்பட்டது. அந்த வழக்கில், மாரிதாஸை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com