பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறிப்பு - இரு இளைஞர்கள் கைது

பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறிப்பு - இரு இளைஞர்கள் கைது
பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறிப்பு - இரு இளைஞர்கள் கைது

மண்ணச்சநல்லூர் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்ததாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய்பட்டி நடுநிலைப் பள்ளியில் ராதா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி மண்ணச்சநல்லூரில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் ஆசிரியை ராதா கழுத்தில் அணிந்திருந்த 3 1ஃ2 பவுன் தாலி செயினை பறித்துக ;கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் தாலுகா சுணைப்புகநல்லூரைச் சேர்ந்த திலகன் என்ற மணி (22) மற்றும் அவரது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த முருகானந்தம் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து ஆசிரியையிடம் பறித்த 3 1ஃ2 பவுன் தங்க செயினை அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தின் கீழ் குழிதோண்டி பதுக்கி வைத்திருந்த அதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com