திருடிய பொருட்களை எடுத்துச்செல்ல கார்-ஐயும் சேர்த்து திருடிய நூதன கொள்ளையர்கள்!

திருடிய பொருட்களை எடுத்துச்செல்ல கார்-ஐயும் சேர்த்து திருடிய நூதன கொள்ளையர்கள்!
திருடிய பொருட்களை எடுத்துச்செல்ல கார்-ஐயும் சேர்த்து திருடிய நூதன கொள்ளையர்கள்!

வீடு புகுந்து கார் சாவியை திருடி, காரை ஓட்டிச் சென்ற சென்ற கொள்ளையர்களை கைது செய்த போலீசார் காரை மீட்டனர்.

சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த கிழக்கு தாம்பரம், பாபுஜி தெருவைச் சேர்ந்தவர் கிருபா (35), இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, சூளைமேடு பகுதிக்கு சென்றுள்ளார். பின் 27 ஆம் தேதி, அவரது வீட்டில் வேலை செய்யும் நபர் இவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்று கிருபா பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த கார் சாவியை திருடி வெளியே நிறுத்தியிருந்த காரை யாரோ கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கிருபா சேலையூர் காவல் நிலையத்தில் கிருபா புகார் அளித்திருக்கிறார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காரை திருடிச் சென்றதாக பம்மலை சேர்ந்த நிக்சன் (25), திரிசூலத்தை சேர்ந்த செல்வராஜ் (38), ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கார், எல்.இ.டி. டிவி, 20 சவரன் தங்க நகை, 240 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com