மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: இரு இடைத்தரகர்கள் கைது – 3 பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: இரு இடைத்தரகர்கள் கைது – 3 பெண்கள் மீட்பு
மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்: இரு இடைத்தரகர்கள் கைது – 3 பெண்கள் மீட்பு

சேலையூரில் பாலியல் தொழிலில் அப்பாவி பெண்களை ஈடுபடுத்த முயன்ற இரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிக்கியிருந்த மூன்று இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை தாம்பரம் பகுதியையடுத்த சேலையூர் அன்னை சத்யா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிகரணை விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த இடைத்தரகரான வினோத் (25), மூர்த்தி (32) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று இளம் பெண்களை மீட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தற்போது அவர்கள் தங்கியுள்ள வீட்டை கடந்த மூன்று மாதங்களாக வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரம் செய்து அங்கு அவர்கள் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களையும், பெண்களையும் சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சேலையூர் போலீசார், இடைத்தரகர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தலைமறைவான முக்கிய குற்றவாளி விஜய் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com