மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்!

மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்!
மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்!

2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்கம் வட தினாஜ்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமிகளை, அங்கு பணிபுரிந்த 35 வயது ஆசிரியர் தொடர்ந்து பாலியல் கொடுமைகள் செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக புகார் ஏதும் வராததால், அந்தக் கொடூரனின் அட்டூழியம் தொடர்கதையாக இருந்துள்ளது. இந்நிலையில் 2 வகுப்புப் படிக்கும் இரண்டு மாணவிகளை பள்ளி நேரம் முடிந்ததும், அந்த கொடூரன் ஒரு வகுப்பறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

குழந்தைகள் இரண்டும் கதறி அழுதுள்ளன. இரண்டு குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், ‘ஏய் இத வீட்டுக்கு போய் யார் கிட்டயும் சொல்லக்கூடாது. இதப்பத்தி யார் கிட்டையாவது சொன்னா? உங்க கொன்னுடுவேன்’ என்று மிரட்டியுள்ளான். குழந்தைகள் இரண்டும் வீட்டிற்கு சென்று, அந்தக் கொடூரன் குறித்து யாரிடமும் கூறவில்லை. ஆனால் மறுநாள் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என்ற அழுதுள்ளன. பெற்றோரும் ஆசிரியர் அடித்திருப்பார் என்று நினைத்து, ‘ஆசிரியர் அடித்தாரா? வகுப்பறையில் சேட்டை செய்தாயா?’ எனக் கேட்டுள்ளனர். 

அவர்களின் தொடர் கேள்விகளை அடுத்து, குழந்தைகள் நடந்த கொடுமைகளை கூறியுள்ளது. அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர், தினாஜ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் ஆசிரியை கைது செய்ய, காவல்துறையினர் பள்ளி சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்தக் கொடூரன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர் கூட்டமாகக் கூடி பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அந்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டுள்ளனர். காவல்துறையினர் தப்பியோடிய அந்தக் கொடூரனை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com