இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு தெருவில் அதிக வெளிச்சம் தெரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், வெளியே வந்து பார்த்த போது இரண்டு வாகனங்களும் எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த வாகன உரிமையாளர்கள், அருகிலிருப்பவர்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதற்குள் இரண்டு வாகனங்களும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் வீட்டின் முன் நிறுத்தப் பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப் பட்ட சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.