கீரனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கிராம நிர்வாக உதவியாளர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் (தலையாரி) முருகேசன் (38) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறுவனை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.