பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இருவர் கைது

பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இருவர் கைது

பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இருவர் கைது
Published on

திரிபுராவிலிருந்து பெண் குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதாக மூன்று காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 4 பெண் குழந்தைகள் சந்தேகப்படும்படியான நபர்கள் உடன் இருப்பதாக பூக்கடை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விடுதிக்கு சென்ற காவல்துறையினர், நான்கு பெண் குழந்தைகளை மீட்டனர். போலீஸ் வருவதை பார்த்த தப்ப முயன்ற பெண் உள்ளிட்ட 4 பேரில் இருவர் சிக்கினர். மீட்கப்பட்ட பெண் குழந்தைகளிடம் குழந்தைகள் நல கவுன்சில் உறுப்பினர் முன்னிலையில் பெண் காவலர்கள் விசாரணை நடத்தினர். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த அவர்களை அழகு நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி சலீமா என்ற பெண்ணும் அவரது கணவர் அன்வர் உசேன் என்பவரும் திரிபுராவில் இருந்து சென்னை அழைத்து வந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவருடன் மைனுதீன், அலாவுதீன் ஆகியோரும் இணைந்து கேளம்பாக்காம் அருகே படூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி அடித்து துன்புறுத்தியதாகவும் பெண் குழந்தைகள் கூறியுள்ளனர். கடந்த 26ஆம் தேதி பெண் குழந்தைகளை வேறொரு பகுதிக்கு அழைத்து செல்வதற்கு ஆட்டோவில் ஏற்றியபோது சலீமாவிற்கும் பெண் குழந்தைகளுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் புகார் கூறியதாக தெரிகிறது. விசாரணைக்கு வந்த காவல்துறையினர் சலீமாவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பணியை சரியாக செய்யவில்லை என 3 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com