மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது

மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது

மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 இளைஞர்கள் கைது
Published on

சென்னை மெரினாவில் துப்பாக்கியுடன் சுற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மெரினா க‌டற்கரை அருகே நேற்று நள்ளிரவு தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, மூன்று பேரிடமும் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 3 பேரையும் விசாரித்ததில், அவ‌ர்கள் திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நேற்றிரவு நொச்சிநகர் பகுதியிலுள்ள ஒரு ரவுடி கும்பலில் உள்ள ஒருவரை மிரட்டுவதற்காகச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com