முருகர் சிலை பறிமுதல்
முருகர் சிலை பறிமுதல்pt desk

திருவண்ணாமலை | ரூ 25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை பறிமுதல் - இருவர் கைது

திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை மற்றும் 35 லட்சம் மதிப்புடைய கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: மகேஷ்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நவபாஷாண சிலைகள், யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

Arrested
Arrestedpt desk

இந்நிலையில் மத்திய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மூன்று நாட்களாக ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மத்திய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்,

முருகர் சிலை பறிமுதல்
வேலைக்காக தொழிலாளர்கள் புலம்பெயர்வது குறைவு.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை!

இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 25 கோடி மதிப்பிலான 2 அடி உயரம் 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலையும், 35 லட்சம் மதிப்பிலான யானை தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இவர்களுடைய கூட்டாளிகள் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com