திருவள்ளூர்: முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் - பட்டாக்கத்தியுடன் 5 பேர் கைது

திருவள்ளூர்: முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் - பட்டாக்கத்தியுடன் 5 பேர் கைது
திருவள்ளூர்: முக்கிய பிரமுகரை கொலை செய்ய திட்டம் - பட்டாக்கத்தியுடன் 5 பேர் கைது

திருவள்ளூரில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி கெஸ்ட் அவுசில் பட்டாக் கத்திகளுடன் பதுங்கி இருந்த 5 பேரை திருவள்ளூர் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் மர்ம நபர்கள் தங்கியிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் காவல் துறையினர் தனியார் திருமண மண்டபத்திற்குச் சென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் அறையில் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணவாள நகர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (30), குற்ற சரித்திர பதிவேடு கொண்ட திருநின்றவூர், பகுதியைச் சேர்ந்த ஜோசப் (எ) தேவகுமார் (35), மோகன் பிரபு (24) அபினாஷ் (19), மப்பேடு டில்லிபாபு (27) என்பது தெரியவந்தது.

அதனையடுத்து 5 பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 2 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com