திருவள்ளூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை... மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

திருவள்ளூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை... மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது
திருவள்ளூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை... மளிகை கடைக்காரர் போக்சோவில் கைது

திருவள்ளூரில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள காரனோடை பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கு ஹரிகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து பெற்றோரிடம் மாணவி கூறியதையடுத்து, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மளிகை கடை உரிமையாளர் ஹரி கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com