திருவள்ளூர்: ராணுவ உடையில் வழிப்பறி - வடமாநிலத்தவர் கைது

திருவள்ளூர்: ராணுவ உடையில் வழிப்பறி - வடமாநிலத்தவர் கைது
திருவள்ளூர்: ராணுவ உடையில் வழிப்பறி - வடமாநிலத்தவர் கைது

சோழவரம் அருகே ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநிலதைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார் என்ற லாரி ஓட்டுநர் கேரளாவில் இருந்து ரப்பர் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த இருளிப்பட்டில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஜனப்பஞ்சத்திரம் பகுதியில் லாரியை எடைபோட நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த நபர் லாரி ஓட்டுநரிடம் வாகனத்தின் ஆவணங்களை சோதிக்க வேண்டும் என கேட்டு கத்தியை காட்டி மிரட்டி 3000 ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சுதாரித்து ராணுவ உடையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சோழவரம் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், ராஜஸ்தானை சேர்ந்த சத்யவீர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த சோழவரம் காவல் துறையினர் பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com