திருப்பூர்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருப்பூர்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
திருப்பூர்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருப்பூரில் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூரை அடுத்த பொங்குபாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கடந்த, 24 ஆம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, 15 வேலம்பாளையம் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனார்.

அப்போது அதில், நள்ளிரவில் ஒருவர் டூவீலரில் சடலத்தை மூட்டையாக கட்டிவந்து, எரித்துச் சென்றது தெரியவந்தது. இதனடிப்படையில், சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், சடலம் கிடந்த, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் இரு நாட்களாக அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த நாய் குரைத்து கொண்டே இருந்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் வசித்து வந்த, ஐந்து பேர் தற்போது இல்லாததை அறிந்த போலீசார், அந்த வீட்டின் உரிமையாளரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீடு பூட்டியிருந்த நிலையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் முன்னிலையில் வீட்டுக்குள் சென்ற போலீசார், சந்தேகப்படும் படியாக இருந்த இடத்தை தோண்டினர்.

தோண்டத் தோண்ட துர்நாற்றம் மட்டுமே கடுமையாக வீசியது. இதையடுத்து அந்த குழிக்குள், மொபைல் போன் சிக்கியது. வீட்டில் தங்கியிருந்த கள்ளக்காதலன் சிவகாசியைச் சேர்ந்த மணிகண்டன், 32, அபிராமி, 27, சத்யா, 8, மகேஸ்வரி, 10 மற்றும் அபிராமியின் தாயார் பஞ்சவர்ணம், 48 ஆகியோர் எங்கு சென்றார்கள், அவர்களின் நிலைமை என்னவென்று விசாரிக்கத் துவங்கினர்.

இதில், கணவரான பரமசிவத்தை பிரிந்து வந்து, மணிகண்டன் என்பவருடன் வாழ்ந்தது தெரியவந்தது. இதனால், எரித்து கொல்லப்பட்டது, இருவரில், யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை போலீசார் முடிவு செய்தனர். எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்ட அன்றைய தினம் காலை பஞ்சவர்ணம் வெளியூருக்கு கிளம்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இரு தனிப்படை போலீசார் சிவகாசிக்கு விரைந்து சென்றனர்.

அங்கிருந்த, தம்பதி, மாமியார் ஆகியோர் சிக்கினர். குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், மூவரையும் திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலன் கொடுமை செய்வதாக மனைவி கூறியதை அடுத்து, கணவர் வந்து கேட்டபோது இருவருக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளது. தற்பொழுது 3 பேரிடம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com