திருப்பத்தூர்: இரைதேடி வந்த மயில்கள்.. விவசாயி செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

திருப்பத்தூர்: இரைதேடி வந்த மயில்கள்.. விவசாயி செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
திருப்பத்தூர்: இரைதேடி வந்த மயில்கள்.. விவசாயி செய்த செயலால் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

வாணியம்பாடி அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குரும்பட்டி பகுதியில் சாவத்திரி என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சண்முகம் (71) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், அந்த விவசாய நிலத்தில் விளைந்துள்ள நெற்பயிர்களை எலிகள் மற்றும் மயில்கள் சேதப்படுத்தி வந்ததால் உணவில் விஷம் கலந்து நிலம் முழுவதும் வைத்துள்ளார்.

இதையடுத்து அந்த உணவை உண்ட மயில்கள் உயிரிழந்தன. இதில் 1 ஆண் மயில்,11 பெண் மயில்கள் என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்காயம் வனத்துறையினர் மயில்களை கைப்பற்றி விஷம் வைத்து கொலை செய்த சண்முகத்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com