நாட்டுத் துப்பாக்கியால் மயில் வேட்டை - முரண்பட்ட பதிலால் சிக்கிய 3 பேர்

நாட்டுத் துப்பாக்கியால் மயில் வேட்டை - முரண்பட்ட பதிலால் சிக்கிய 3 பேர்
நாட்டுத் துப்பாக்கியால் மயில் வேட்டை - முரண்பட்ட பதிலால் சிக்கிய 3 பேர்

புதுக்கோட்டை அருகே நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு மயில்களை வேட்டையாடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல்நிலைய போலீஸார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். போலீஸாரின் கேள்விக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது, அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. அதைக்கொண்டு அவர்கள் மூன்று மயில்களை வேட்டையாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், மூன்று பேரும் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பெருமாள், மூர்த்தி மற்றும் ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

பின்னர் இவர்கள் தொடர்பாக புதுக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு போலீஸார் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மூன்று மயில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com