ஒருதலைக் காதலை கண்டித்ததால் ஆத்திரம்: வாகனங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்!

ஒருதலைக் காதலை கண்டித்ததால் ஆத்திரம்: வாகனங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்!
ஒருதலைக் காதலை கண்டித்ததால் ஆத்திரம்: வாகனங்களை அடித்து நொறுக்கிய இளைஞர்!


மதுரையில் ஒருதலைக் காதலை பெண்ணின் தந்தை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர், காதலியின் வீட்டிற்குச் சென்று வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார்.


மதுரை இஸ்மாயில் புரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மகளை அப்பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவர் ஒரு தலையாக காதலித்துள்ளார், இதனை அந்தப் பெண் தன் தந்தை சிக்கந்தரிடம் கூறி உள்ளார்,


இதனைத்தொடர்ந்து தன் மகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆசிப்பை கண்டித்துள்ளார் சிக்கந்தர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகாத முறையில் திட்டியதோடு அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து சிக்கந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் சார்பு ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன், வழக்குப்பதிவு செய்து ஆசிப் உட்பட 3 பேரை கைது செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com