பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைதுpt desk

தூத்துக்குடி | பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது - அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் கைது. செய்த போலீசார், கத்தி, அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.
Published on

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார், மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம நபர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, தனிபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணி மைக்கேல் சுகந்தன் (40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
ராமநாதபுரம் | குழந்தையை கொடூரமாக கொலை செய்த மாமன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இதையடுத்து அவரிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. பல வழக்குகளில் தொடர்புடைய இவர், தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com